ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாய்பல்லவி நடித்துள்ள விராட பருவம் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டார் சாய்பல்லவி. இதன் ஒரு பகுதியாக சாய்பல்லவி அளித்த ஒரு பேட்டியில் மதங்கள் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டார்.
காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இறைச்சி விற்ற இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதும் இரண்டுமே மதவன்முறை தான். மதத்தின் பெயரால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த அகில் என்பவர் சாய்பல்லவி மீது புகார் கொடுத்துள்ளார். நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை பசு காவலர்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். அவரின் இந்த கருத்து நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருக்கிறார். இந்த புகாரின் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.