இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நமது நாடு மதச்சார்பற்ற நாடுதானா, ஜனநாயகம் இருக்கிறதா என்று நடிகர் அஜித் கேள்வி எழுப்பியுள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு திரையுலகினர் ஒவ்வொருவராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபன், டைரக்டர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டடோர் இப்பிரச்னை தொடர்பாக ஏற்கனவே தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித்தும் விஸ்வரூபம் பிரச்னைக்கு குரல் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியல் சட்டம் நமது இந்திய திருநாடு ஒரு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும் இதன் மூலமாக ஒரு இந்திய குடி மகனுக்கு சமநீதி , உரிமை , மற்றும் சமத்துவம் என்று உத்தரவாதம் அளிக்கின்றது . ஆனால் இன்றைய நிலை என்ன தெரியுமா. இந்த உத்தரவாதங்கள் திரிக்கபட்ட வாசகங்களும், வார்த்தைகளும், புறம் பேசி பிரித்தாள்வதும, சுயநல போக்கும் தான் என்றாகி விட்டது .
மதசார்பின்மை என்றால் அரசியல் அமைப்பும் சரி சமூக அமைப்பும் சரி மதசார்புள்ள நம்பிக்கையையும் வழிபாட்டையும் ஏற்று கொள்ளாததே. நமது நாடு மத சார்பற்ற நாடுதானா என்ற ஐயம் ஓட்டு வங்கி அரசியலை பார்க்கும் போதும், உணரும் போதும் தோன்றவே செய்கிறது. நமது நாட்டில் ஜனநாயகமும் மதசார்பற்ற நிலையும் ஒரு புரிந்து கொள்ளப்படாதது அல்ல. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையும், நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு நினைத்துப் பார்க்க இதுவே சரியான தருணம்.
இவ்வாறு அஜித் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.