விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் ‛விக்ரம்'. அதிரடி ஆக் ஷன் படமாக வெளிவந்துள்ள இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் ரோலெக்ஸ் என்ற சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார். இவரின் வேடம் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கான லீடாகவும் மாறி உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது பற்றியும், கமல் உடன் நடித்த அனுபவம் பற்றியும் சூர்யா கூறுகையில், ‛‛அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா... எப்படி சொல்றது. உங்களுடன் நடிக்க வேண்டும் என்கிற கனவு நனவாகி உள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த லோகேஷிற்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
இதற்கு கமல், ‛‛இது நீண்டநாட்களாக நடக்க இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். உங்களின் அன்பு ஏற்கனவே உள்ளது. அது இன்னும் மக்களிடம் அதிகமாகிறது. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தம்பி. மன்னிக்க தம்பி சார்'' என பதில் கொடுத்துள்ளார்.