ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகரான துல்கர் சல்மான் தென்னிந்திய மொழிகளில் கன்னடம் தவிர மற்ற மூன்று மொழிகளிலும் சரிசமமாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து மூன்று படங்களில் நடித்துவிட்டார். அந்த வகையில் தெலுங்கில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான மகாநடி படத்தின் மூலம் உள்ளே நுழைந்த துல்கர் சல்மான் தற்போது சீதாராமம் என்கிற தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் நடித்து முடித்து விட்டார்.
இயக்குனர் ஹனு ராகவபுடி என்பவர் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கியமான வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட்-5 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் லெப்டினன்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். போர் பதற்றம் நிறைந்த எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது