‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் 'நினைத்தாலே இனிக்கும்' டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வருகிறது. இந்த தொடரில் தர்ஷினி என்ற கதாபாத்திரத்திற்கு இதுவரை மூன்று நடிகர்கள் மாறிவிட்டனர். சீரியலின் தொடக்கத்தில் தர்ஷினி கதாபாத்திரத்தில் முதலில் தீப்தி ராஜேந்திரன் என்ற நடிகை நடித்து வந்தார். ஆனால், அவர் திடீரென விலகிவிட்ட நிலையில் ஸ்ரீநிதி நடிக்க ஆரம்பித்தார். ஸ்ரீநிதி நடிக்க ஆரம்பித்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அவரும் மாற்றப்பட்டு புதிதாக தாட்சாயினி என்ற நடிகையை நடிக்க வைத்துள்ளனர். இவர் ஜீ தமிழில் ஏற்கனவே ஒளிபரப்பான 'என்றென்றும் புன்னகை', 'சூர்யவம்சம்' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.