600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஷா கணேஷ். தொடர்ந்து வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் திரையில் பெரிதாக தோன்றாத அவர் கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலில் என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிஷா வக்கீல் உடையுடன் போட்டோவையும் 'கீதா சுப்பிரமணியன்' என்ற அவரது கதாபாத்திரத்தின் பெயரையும் வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது குறித்து அந்த பதிவில் வெளியிடவில்லை. அதேசமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் தான் நிஷா கணேஷ் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தவாரம் முதல் அவர் இந்த தொடரில் இடம் பெற உள்ளார்.