டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடல் அழகியும், நடிகையுமான சஹான தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த ஈரம் காயும் முன்பே மலையாள படங்களில் நடித்து வந்த திருநங்கை நடிகை ஷெரின் ஷெலின் மேத்யூ மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். 26 வயதான ஷெலின் ஷெரின் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஏராளமான படங்களில் திருநங்கையாகவும், நாயகன், நாயகியின் தோழியாகவும் நடித்துள்ளார். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
கொச்சி சக்கராம்பரம்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஷெரின் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஷெரின் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.