பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியத் திரையுலகில் 1000 கோடி வசூலைக் கடந்து வெளியாகி ஒரு மாதம் ஆனாலும் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள்.
இப்படத்திற்கு மட்டும் தனியாக பணம் செலுத்திதான் பார்க்க வேண்டும் என்றாலும் திடீரென படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது தியேட்டர்காரர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தியேட்டர்களில் படத்தை இன்றுடன் தூக்கிவிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தியேட்டர்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை இப்படியா வெளியிடுவது என தயாரிப்பாளர்கள் மீது தியேட்டர்காரர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்களாம். ஒரு மாநிலத்தில் மட்டும் வெளியாகியிருந்தால் பரவாயில்லை. பான்--இந்தியா படமாக வெளியாகி அனைத்து இடங்களிலும் நன்றாக ஓடும் படத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஓடிடி வெளியீடு ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்களாம்.
1200 கோடிக்கும் மேலும் வசூல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'கேஜிஎப் 2' படம் விரைவில் முழுவதுமாக தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் எனத் தெரிகிறது.