Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.30 கோடி தேவை: வங்கி கடன் வாங்கி கட்டிடம் கட்ட நடிகர் சங்கம் முடிவு

09 மே, 2022 - 13:11 IST
எழுத்தின் அளவு:
Rs-30-crore-required:-Actors'-Association-decides-to-build-the-building-with-a-bank-loan

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வங்கியில் கடன் பெற்று நடிகர் சங்க கட்டிட பணிகள் செயல்படுத்தப்படும். முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்ந்து நடத்தப்படும். மேலும் சில புதிய வழக்குகள் தொடரப்படும். இவைகள் உள்பட மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

பொதுக்குழுவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி, மூத்த நடிகைகள் ராதிகா, பாரதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

பொதுக்குழுவை வாழ்த்தி ரஜினிகாந்த் அனுப்பிய ஆடியோ ஒலிபரப்பபட்டது அதில் அவர் பேசியிருந்தாவது: ரொம்ப நாட்களுக்கு முன்பாக பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று முதன் முதலில் பொதுக்குழுவை கூட்டி உள்ள பாண்டவர் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய எனக்கு பாராட்டி விருது வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறேன். பாண்டவர் அணியினர் நடிகர் சங்கத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு இருக்கிறீர்களோ அவையெல்லாம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன். என்று பேசி இருந்தார்.

பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் அளித்த பேட்டியில் கூறியதாவது: நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர இரவு விழா நடத்துவதா அல்லது வங்கியில் கடன் வாங்குவதா என்று பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்படுவோம். இதுவரை 70 சதவீத கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது. உள் வடிவமைப்பையும் சேர்த்து இன்னும் 40 சதவிகித வேலை உள்ளது. இதை முடிப்பதற்கு இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை எப்படி திரட்டலாம் என்று ஆலோசனை செய்துள்ளோம்.

தனிப்பட்ட முறையிலும் நடிகர் நடிகைகளிடம் கேட்டு, அவர்களிடமும் நிதியை திரட்ட உள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் என்பதால் நடிகர் நடிகைகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை. அதேபோல், வங்கியிலும் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி விட்டோம். எல்லா வகையிலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வசூல் செய்து எந்தளவுக்கு விரைந்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிப்போம்.

இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்படும். நேர்மறையாக தொடங்க இருக்கிறோம். இதன்பிறகு, கட்டடம் கட்டுவதற்கு எந்த தடங்களும், தடைகளும், சச்சரவுகளும் வராது என்று நம்புகிறோம். இது சாதாரண கட்டிடமாக இருக்காது. சென்னையில் ஒரு அடையாளமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அனைவரும் ஒருமுறையாவது நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு வர வேண்டும். அதற்கும் சேர்த்து தான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறோம் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் அதிதி ராவ்கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து ... ஆக்ஷன் ஹீரோவான அசோக் செல்வன் ஆக்ஷன் ஹீரோவான அசோக் செல்வன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
10 மே, 2022 - 00:49 Report Abuse
Bye Pass சென்னை வருபவர்கள் நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு வர வேண்டும் என்றால் அன்றாடம் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தி பார் வசதியும் செய்து தரவேண்டும்
Rate this:
09 மே, 2022 - 14:34 Report Abuse
ஃshanan பாவம் அனைவரும் ஏழைகள் அதனால்தான் வங்கிக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in