'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
திரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு படத்தில் திரிஷா நடிக்கிறார். பல குறும்படங்கள், விளம்பர படங்கள் மற்றும் வெப்தொடர் எடுத்த அருண் வசீகரன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் இரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே கதையின் கரு. 2000களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது.
திரிஷா முதன்மை நாயகியாக நடிக்க, அவருடன் மியார் ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடிக்கிறார்கள். உண்மை சம்பவம் நிகழ்ந்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(ஏப்., 25) முதல் படப்பிடிப்பை துவக்கி உள்ளனர். தொடர்ச்சியாக 50 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.