ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக மலையாளத்தில் ஹிட் அடித்த படம் ஒன்றை மற்ற தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்காக போட்டி போட்டு வாங்குவார்கள். ஆனால் ஒவ்வொரு மொழி ரீமேக்கும் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாவது தான் வழக்கம். இதற்கு முன்னதாக திலீப் நடித்த பாடிகார்ட், மோகன்லால் நடித்த திரிஷ்யம் ஆகிய படங்களின் ரீமேக்குகள் இந்த விதமாகத்தான் வெளியாகி உள்ளன.
அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜோசப் என்கிற படமும் இதே போல தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. இந்த நிலையில் தமிழில் இதன் ரீமேக்கில் ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்க ஒரிஜினலை இயக்கிய இயக்குனர் பத்மகுமார் தமிழிலும் இயக்கியுள்ளார். விசித்திரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் மே 6ம் தேதி ரிலீசாக உள்ளது.
அதேபோல இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டாக்டர் ராஜசேகர் நடித்துள்ளார். சேகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அவரது மனைவி ஜீவிதா இயக்கியுள்ளார் நேற்று நடைபெற்ற சேகர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இந்த படம் மே 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு மலையாள படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்குகள் ஒரே சமயத்தில் அதிலும் 15 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த வெளியாகிறது என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான்.