விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |
கடந்த 2 ஆண்டுகளாகவே பரத்க்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் இல்லை. தற்போது அவர் முன்பு நடித்து கிடப்பில் கிடந்த கில்லாடி படம் வெளிவர இருக்கிறது. அதைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் பரத் நடிக்கும் 555 படம் வெளிவர இருக்கிறது. 555 படத்துக்காக பரத் நீண்ட தலைமுடி வளர்த்து, சிக்ஸ் பேக்ஸ் வைத்து கடுமையாக உழைத்து வருவதாக கூறப்பட்டது. படத்தின் கெட்-அப் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சில காலம் வெளியில் வராமல்கூட இருந்தார். தற்போது படம் முடிந்து விட்டதால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதுபற்றி பரத் கூறியதாவது: 555 படம் எனக்கு மிக முக்கியமான படம். இந்தப் படத்துக்காக 2 வருடம் கடுமையாக உழைத்திருக்கிறேன். எல்லோரையும் மிரள வைக்கிற மாதிரி ஒரு படம் நடிக்கணும்னு முடிவு பண்ணி நடிக்கிற படம் இது. படம் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. எனக்கு திருப்புமுனை வரும் படம் இது. கதைக்கு தேவை என்பதால் சிக்ஸ் பேக்ஸ் வைத்து நடித்தேன். இதுவரை பார்க்காத பரத்தை இதில் பார்க்கலாம். என் கேரியரை 555க்கு முன் 555க்கு பின் என்று இனி குறிப்பிடுவார்கள். என்றார்.