பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இப்போதெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்க வேண்டும் என்றால் கதை மட்டும் போதாது. சம்பந்தப்பட்ட படத்தைப்பற்றி ஏதேனும் ஒருவகையில் பரபரப்பான செய்திகள் வெளியாக வேண்டும். அப்போதுதான் இன்று அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்களை திரும்பிப்பார்கக் வைக்க முடியும். அதனால்தான் சமர் படம் வெளியாவதற்கு முன்பு எத்தனையோ தடைகள், பிரச்சினைகள் இருந்தும் அப்போது அதைப்பற்றி எதுவும் பேசாத விஷால் இப்போது அப்படம் திரைக்கு வந்திருக்கும நேரத்தில் பப்ளிசிட்டிக்காக புதுப்புது விசயங்களை பரபரப்பாக வெளியிட்டு வருகிறார்.
அதாவது, சமர் படத்திற்கான தேங்காய் உடைத்து பூஜை போட்ட நாளில் இருந்து பூசணிக்காய் உடைக்கிற நாள் வரை ஒவ்வொரு பிரச்சினைகளாக உருவெடுத்துக்கொண்டிருந்தது. அதையடுத்து படத்தை தியேட்டருக்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட சிக்கல். எதிர்பார்த்தபடி தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்கு எதிர்ப்பாக ஒரு கூட்டமே செயல்பட்டது. ஏன் எதற்காக அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் திரைக்கு வந்து விட்டது. அதோடு, படிப்படியாக படத்திற்கான வசூல் கூடிக்கொண்டே வருகிறது. அதனால், இப்போது இதுவரை படத்தை வெளிக்கொண்டு வருவதற்காக போராடிய களைப்பு போய் விட்டது. மாறாக, படத்தின் வெற்றி காரணமாக சந்தோஷ களிப்பு தொற்றிக்கொண்டுள்ளது என்கிறார்.
அவரிடத்தில் அப்படி உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டது யார்? என்று கேட்டால், அதுதான் தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால்தான் பிரச்சினை இருந்திருக்காதே. யாரோ முகம் தெரியாத நபர்கள்தான் சமர் படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தடையாக இருந்தார்கள் என்று சூசகமாக பதில் அளிக்கிறார் விஷால்.