ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தன்னை தானே மிகைப்படுத்தி கொள்வதில் சீனிவாசனுக்கு நிகர் சீனிவாசன் தான். தன்னுடைய முதல்படமான லத்திகா படம் வெளிவருதற்கு முன்பே சீனிவாசன் என்ற பெயருக்கு முன்னால் பவர்ஸ்டார் என்று தன்னை பிரபலப்படுத்தியவர். அதுமட்டுமின்றி அவ்வப்போது இன்றைய நடிகர்களில் தனக்கு போட்டியான ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே, எனது நடிப்பை பார்த்து ஷங்கரே அவரது படத்தில் நடிக்க வைத்தார், என்னுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டார் என்று ஏக வசனம் பேசுபவர். இவர் நடித்த முதல்படமான லத்திகா படம் தியேட்டர்களில் ஓடாமலேயே 300 நாட்கள் ஓடியதாக தமிழகம் முழுக்க போஸ்டர் அடித்து விளம்பரபடுத்தியவர், உண்மையிலேயே அவரது படம் ஹிட்டானால் சும்மாவா இருப்பார். ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து வருகிறார்.
இந்த பொங்கலுக்கு நடிகர் சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்து இருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளதால் மனுசனை பிடிக்கவே முடியவில்லை. ஏக குஷியில் இருக்கிறார். ஏற்கனவே தன்னை பவர்ஸ்டார் என்று பிரபலப்படுத்தியவர் இப்போது தான் ஒரு மாஸ் ஹீரோ என்று கூறி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் என்னுடைய நடிப்பை ரசிகர்கள் மிகவும் கொண்டாடுகிறார்கள், மகிழ்கிறார்கள். இன்றைய ரசிகர்களின் ரசனையை உணர்ந்து நான் நடித்து வருகிறேன். அதனால் தான் அவர்கள் என்னை கொண்டாடுகிறார்கள். எப்பவுமே நான் தான் மாஸ் ஹீரோ என்று மார்தட்டி கொள்கிறார்.