'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
3 படத்துக்குப்பிறகு தனுஷ் அதிக நம்பிக்கையுடன் நடித்து வரும் படம் மரியான். நீர்ப்பறவை, கடல் படங்களைப்போன்று இந்த படமும் கடற்கரையோர மக்கள் சார்ந்த கதையில் உருவாகி வருகிறது. கதைப்படி மீனவனாக நடிக்கும் தனுஷ். இரவு பகல் பாராமல் எந்நேரம் இயக்குனர் படப்பிடிப்பை வைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். உப்புக்காற்றை நீண்ட நேரம் சுவாசிக்க கஷ்டமாக உள்ளது என்று யூனிட்வாசிகள் சொன்னபோதும், அந்த மாதிரி வார்த்தை தனுஷ் வாயிலிருந்து மட்டும் வர மறுக்கிறதாம். அந்த அளவுக்கு ஒரு பரம்பரை மீனவனாகவே மாறிப்போயிருக்கிறாராம்.
மேலும், இப்படத்துக்காக தென்ஆப்பிரிக்காவிலுள்ள கடற்கரை பகுதிகளில் படமாக்கப்பட்டபோது, சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் மணலில் விழுந்து புரண்டெல்லாம் நடித்தாராம் தனுஷ். அதைப்பார்த்து கலங்கிப்போன அப்படத்தின் நாயகியான பூ பார்வதி, எந்தவொரு பிரபல ஹீரோக்களுமே இப்படி நடிக்கத்துணிய மாட்டார்கள். அந்த வகையில் தனுஷ் கிரேட் ஆக்டர் என்பதை நிரூபித்து விட்டார். அவர் போன்ற நடிகர்களுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தது ரொம்ப பெருமையாக உள்ளது என்று தனுஷ் புராணம் பாடிக்கொண்டு திரிகிறார் பார்வதி.