இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
3 படத்துக்குப்பிறகு தனுஷ் அதிக நம்பிக்கையுடன் நடித்து வரும் படம் மரியான். நீர்ப்பறவை, கடல் படங்களைப்போன்று இந்த படமும் கடற்கரையோர மக்கள் சார்ந்த கதையில் உருவாகி வருகிறது. கதைப்படி மீனவனாக நடிக்கும் தனுஷ். இரவு பகல் பாராமல் எந்நேரம் இயக்குனர் படப்பிடிப்பை வைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். உப்புக்காற்றை நீண்ட நேரம் சுவாசிக்க கஷ்டமாக உள்ளது என்று யூனிட்வாசிகள் சொன்னபோதும், அந்த மாதிரி வார்த்தை தனுஷ் வாயிலிருந்து மட்டும் வர மறுக்கிறதாம். அந்த அளவுக்கு ஒரு பரம்பரை மீனவனாகவே மாறிப்போயிருக்கிறாராம்.
மேலும், இப்படத்துக்காக தென்ஆப்பிரிக்காவிலுள்ள கடற்கரை பகுதிகளில் படமாக்கப்பட்டபோது, சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் மணலில் விழுந்து புரண்டெல்லாம் நடித்தாராம் தனுஷ். அதைப்பார்த்து கலங்கிப்போன அப்படத்தின் நாயகியான பூ பார்வதி, எந்தவொரு பிரபல ஹீரோக்களுமே இப்படி நடிக்கத்துணிய மாட்டார்கள். அந்த வகையில் தனுஷ் கிரேட் ஆக்டர் என்பதை நிரூபித்து விட்டார். அவர் போன்ற நடிகர்களுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தது ரொம்ப பெருமையாக உள்ளது என்று தனுஷ் புராணம் பாடிக்கொண்டு திரிகிறார் பார்வதி.