விஷால்தான் என்னை வெளிச்சம் போட்டு காட்டினார்- த்ரிஷா
லேசா லேசா படத்தில் அறிமுகமான த்ரிஷா நடிகையாகி 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் நடித்து விட்டார். ஆனால் இன்னும் கதாநாயகியை மையமாகக்கொண்ட கதைகளில் அவர் நடிக்கவில்லை. எல்லா படங்களிலுமே டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார். மேலும் வருடங்கள் அதிகமாகி விட்டதால் இனிமேல் தனக்கு வெயிட்டான கதாபாத்திரங்களும் கிடைப்பது அரிது என்றுதான் நினைத்திருந்தார் த்ரிஷா.
ஆனால் அவரும், மற்றவர்களும் எதிர்பார்க்காத வகையில், சமர் படத்தில் த்ரிஷாவை நெகடீவ் ஹீரோயினியாக நடிக்க வைத்தார் விஷால். அந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகையை இயக்குனர் பரிந்துரைத்தபோது, த்ரிஷாதான் நடிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் சிபாரிசு செய்து அவரை நடிக்க வைத்திருக்கிறார் விஷால். இதுவரை தான் நடிக்காத வேடம் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. அதைப்பார்த்து விட்டு, இப்போதும் சில தெலுங்கு இயக்குனர்களும் நெகடீவ் ஹீரோயினியாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்கிறார்களாம். இதனால் உற்சாகத்தில் இருக்கும் த்ரிஷா, எனக்குள் இருக்கும் இனனொரு நடிகையை வெளிச்சம் போட்டு காட்டியவர் விஷால்தான். அதனால் அவருக்கு நான் எப்போதுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று கூறி வருகிறார். ஆனால் இதை கேள்விப்பட்ட விஷால், நன்றி சொல்லி நமது பல ஆண்டு ப்ரண்ட்ஷிப்பை களங்கப்படுத்தாதே த்ரிஷா என்று எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளாராம்.