தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"மழை படத்தின் மூலம் பருவ மழையாய் கோலிவுட்டில் நுழைந்தவர், ஸ்ரேயா. என்ன தவம் செய்தாரோ, சில படங்களில் நடித்து வந்தவர், திடுத்திடுப்பென்று, "சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாகி, உச்ச நடிகை அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். ஆனபோதும் தொடர்ந்து, அந்த இடத்தை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. சில படங்கள், அவரை சறுக்கிவிட, தமிழில் இருந்து வெளியேறி, இந்தி, கன்னடம் என்று நடித்து வருகிறார். ஆனால், "நான் அங்கேயே தேங்கிவிடமாட்டேன் என்று சொல்லும் ஸ்ரேயா, "அடுத்த ரவுண்டுக்கான அஸ்திவாரத்தை அழுத்தமாக பதித்து வருகிறேன் என்கிறார். தீபா மேத்தாவின், "மிட் நைட் சில்ரன்ஸ், ரங்தே பசந்தி இந்தி படம் மற்றும் "சந்திரா ஆகிய படங்களுக்கு பின், மீண்டும் தமிழில், முழு வீச்சில் நடிப்பேன் என்கிறார்.