ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எந்நேரமும், சினிமா சினிமா என்று, ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் - நடிகையர், ரிலாக்ஸ் தேவைப்படும் போது, வெளிநாடுகளுக்கு ஹாயாக சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இதில், விஜய், அஜீத் போன்ற நடிகர்கள், ஒரு படத்தில் நடித்து முடித்ததும், குடும்பத்தாருடன் அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் விக்ரமோ, தன் மனதுக்கு, எப்போது மாறுதல் தேவைப்படுகிறதோ, அப்போதே வெளிநாட்டுக்கு பறந்துவிடுவார். அந்த வகையில், தற்போது ஷங்கரின், "ஐபடத்தில் பிசியாக நடித்து வரும் விக்ரம், இடைவிடாத படப்பிடிப்பிலும், ஒரு சிறிய இடைவெளி கிடைத்ததும், குடும்பத்துடன் நியூசிலாந்து சென்று கிறிஸ்துமஸ், புத்தாண்டை புதிய இடத்தில், புதிய சூழ்நிலையில் கொண்டாடி மகிழ்ந்துவிட்டு, சென்னை திரும்பியுள்ளார்.