துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
லட்டு திண்ண பவர் ஸ்டாருக்கு மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் டாப் ஹீரோக்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். சில தினங்களுக்கு முன்பு அடையாரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூடி கும்மாளமடித்த ஹீரோக்கள் இதுகுறித்து காரசாரமாகவே பேசிக் கொண்டார்களாம். "நாமெல்லாம் கஷ்டப்பட்டு நடிச்சு படம் பண்ணினால் அது சொத்தை இது சொதப்பல்னு சொல்ற மீடியாக்கள், ஒரு கிரிமினல் நடிச்ச படத்தை தலைக்கு மேல வச்சு கொண்டாடுறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்" என்று வீராவேசம் பேசியிருக்கிறார்கள். சந்தனமான காமெடி இனியும் பவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தங்கள் படத்திலிருந்து சந்தனத்தை கரைத்து விட வேண்டியதுதான் என்றும் பேசி முடிவு செய்திருக்கிறார்களாம். அதோடு பவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதில் நாம் கலந்த கொள்ளக்கூடாது என்றும் அந்த ரகசிய கூட்டத்தில் ரகசிய தீர்மானம போட்டிருக்காங்களாம்.