பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
வடிவேலு யூனிட்டில் காமெடி ரைட்டராக இருந்த தம்பி ராமையா மனுநீதி என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு வடிவேலு நடிக்க இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தை இயக்கினார். இரண்டுமே தோல்விப் படங்கள். ஒருகூடை முத்தம் என்ற படம் இயக்கிக் கொண்டிருந்தபோதுதான் மைனா மூலம் விருது பெற்று தீவிர நடிகர் ஆனார் ஒரு படத்தில் நடிக்க சில ஆயிரங்கள் வாங்கிய தம்பி ராமையா இப்போது ஒரு நாள் நடிக்க சில லட்சங்கள் வாங்குகிறார். இந்த நிலையில் அவர் படம் இயக்கவும் இருக்கிறார். "நடிப்பில் பிசியாக இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு இயக்குனர். நடிப்பில் நாலு காசு வருது. அதுக்கு பங்கம் வந்திடாம படம் இயக்கும் ஆசையில் இருக்கிறேன். ரெண்டு பாயும் புலியும் ஒரு பச்சைக் கிளியும் என்பது படத்தின் தலைப்பு. கதைக்கு தேவையான நடிகர்களை செலக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன். தயாரிப்பாளரும் ரெடி. சீக்கிரமே சூட்டிங் போறோம்" என்கிறார் தம்பி ராமையா.