சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
வடிவேலு யூனிட்டில் காமெடி ரைட்டராக இருந்த தம்பி ராமையா மனுநீதி என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு வடிவேலு நடிக்க இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தை இயக்கினார். இரண்டுமே தோல்விப் படங்கள். ஒருகூடை முத்தம் என்ற படம் இயக்கிக் கொண்டிருந்தபோதுதான் மைனா மூலம் விருது பெற்று தீவிர நடிகர் ஆனார் ஒரு படத்தில் நடிக்க சில ஆயிரங்கள் வாங்கிய தம்பி ராமையா இப்போது ஒரு நாள் நடிக்க சில லட்சங்கள் வாங்குகிறார். இந்த நிலையில் அவர் படம் இயக்கவும் இருக்கிறார். "நடிப்பில் பிசியாக இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு இயக்குனர். நடிப்பில் நாலு காசு வருது. அதுக்கு பங்கம் வந்திடாம படம் இயக்கும் ஆசையில் இருக்கிறேன். ரெண்டு பாயும் புலியும் ஒரு பச்சைக் கிளியும் என்பது படத்தின் தலைப்பு. கதைக்கு தேவையான நடிகர்களை செலக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன். தயாரிப்பாளரும் ரெடி. சீக்கிரமே சூட்டிங் போறோம்" என்கிறார் தம்பி ராமையா.