'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வடிவேலு யூனிட்டில் காமெடி ரைட்டராக இருந்த தம்பி ராமையா மனுநீதி என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு வடிவேலு நடிக்க இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தை இயக்கினார். இரண்டுமே தோல்விப் படங்கள். ஒருகூடை முத்தம் என்ற படம் இயக்கிக் கொண்டிருந்தபோதுதான் மைனா மூலம் விருது பெற்று தீவிர நடிகர் ஆனார் ஒரு படத்தில் நடிக்க சில ஆயிரங்கள் வாங்கிய தம்பி ராமையா இப்போது ஒரு நாள் நடிக்க சில லட்சங்கள் வாங்குகிறார். இந்த நிலையில் அவர் படம் இயக்கவும் இருக்கிறார். "நடிப்பில் பிசியாக இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு இயக்குனர். நடிப்பில் நாலு காசு வருது. அதுக்கு பங்கம் வந்திடாம படம் இயக்கும் ஆசையில் இருக்கிறேன். ரெண்டு பாயும் புலியும் ஒரு பச்சைக் கிளியும் என்பது படத்தின் தலைப்பு. கதைக்கு தேவையான நடிகர்களை செலக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன். தயாரிப்பாளரும் ரெடி. சீக்கிரமே சூட்டிங் போறோம்" என்கிறார் தம்பி ராமையா.