பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தனது சினிமா கேரியரில் எத்தனையோ நடிகர்-நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம். சீனியர் கலைஞர்கள்கூட அவர் படத்தில் நடிக்க வரும்போது புதுமுகங்கள் ரேஞ்சுக்கு மாறிவிடுவார்கள். அந்த அளவுக்கு இதுவரை நடித்ததை மறந்து விட்டு புதுசாக தங்களை புதுப்பித்துக்கொண்டு நடிப்பார்கள். அதோடு புதிதாக கேமரா முன்பு வருவது போன்ற அச்சமும் அவர்களின் முகத்தில் இருக்கும். இதை தற்போது மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்துள்ள அர்ஜூனே கூறியுள்ளார்.
ஆனால் இதே கடல் படத்தில் அறிமுகமாகியுள்ள மாஜி நடிகை ராதாவின் மகளான துளசி மணிரத்னம் படம் என்றபோதும் சரி, கேமரா முன்பு நின்றபோதும் சரி துளியும் அச்சம் கொள்ளவில்லையாம். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவரைப்போன்று கேசுவலாக நடித்தாராம். இதை படப்பிடிப்பு தளத்தில் பார்த்து ஆச்சரியப்பட்ட மணிரத்னம், அதை கடல் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேடையில் துளசியிடம் கேட்டார். அதற்கு, எதற்கு பயப்பட வேண்டும். நான் நானாக இருந்தால்தானே பயப்பட வேண்டாம். நான் அந்த கேரக்டராக மாறியல்லவா ஸ்பாட்டில் நின்றேன் என்று மணிரத்னத்தையே புல்லரிக்க வைத்தார் துளசி. அதோடு, மேலும், நடிப்பு என்பது என்னைப்பொறுத்தவரை புதியதாக இருந்தாலும், என் அம்மா, பெரியம்மா, மாமா, அக்கா என எங்கள் குடும்பமே சினிமா குடும்பம்தானே. அதனால் நடிப்பதற்கும் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை என்றார் துளசி.