விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தனது விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப கமல் தனி ஆளாக நின்று போராடி வருகிறார். தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் கமலுக்கு எதிராக நின்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர். ரஜினி, விஜய், அஜீத் உள்பட எந்த நடிகரும் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. தியேட்டர்காரர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டுமே என்று ஒதுங்கி விட்டார்கள். இதுகுறித்து கமல் ஒரு பேட்டியில் "அவர்கள் யோசித்து கொண்டிருக்கலாம். அன்பை நான் கொடுக்கத்தான் முடியுமே தவிர அதை திருப்பிக் கேட்டு கட்டாயப்படுத்த முடியாது" என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் கமலுக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கமலின் இந்த முடிவு முக்கியமானது. என் படத்தை பார்க்க தியேட்டருக்கு வாங்க வாங்க என்று ரசிகர்களை இனியும் அழைக்க முடியாது. காரணம் அவர்களுக்கும் நேரம் முக்கியமானது. ரசிகனிடமிருந்து பணத்தையும் வாங்கிக் கொண்டு அவனது நேரத்தையும் வாங்குகிற துறை இது. வாடிக்கையாளர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே அவர்களை தேடிச் சென்று பொருளை கொடுக்கிற காலம் இது. பீட்சாவிலிருந்து கல்தோசை வரை டோர் டெலிவரி கொடுக்கிறார்கள். அதைத்தான் கமலும் செய்கிறார். ரசிகனுக்கு படத்தை டோர் டெலிவரி செய்யும் முயற்சி இது. பலருக்கு தியேட்டருக்கு வர நேரம் இல்லை. அதனால் கமலின் இந்த முயற்சி தியேட்டரை மறந்த ரசிகர்களை மீண்டும் சினிமா பக்கம் திருப்பும். எல்லாவற்றையும் விட ஒரு புதிய முயற்சிக்கு என்னதான் முடிவு கிடைக்கிறது என்பதை பார்த்துவிடலாமே.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார்.