Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛உதிரிப்பூக்கள்' தந்தவர், ரஜினிக்கு கை கொடுத்தவர் - மகேந்திரன் எனும் படைப்பாளி

02 ஏப், 2022 - 16:32 IST
எழுத்தின் அளவு:
Director-Mahendran-3rd-death-anniversary

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு இயக்குனர் மகேந்திரன். ‛‛முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, பூட்டாத பூட்டுகள், மெட்டி'' என இவரது ஒவ்வொரு படைப்புகளும் ஒவ்வொரு ரகம். இவர் இயக்கிய படங்கள் குறைவு என்றாலும் அவை ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத படைப்புகள் என்றால் மிகையல்ல. இவர் மறைந்து இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் 1939ம் ஆண்டு ஜூலை 25ல் பிறந்த இவர் தனது பள்ளி படிப்பை சொந்த ஊரிலும், பின்னர் இண்டர்மீடியட் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், அதைத் தொடர்ந்து இளங்கலை பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் படித்தார்.


1958 ஆம் ஆண்டு அழகப்பா கல்லூரியின் ஆண்டு விழாவில் எம்ஜிஆர் முன்னிலையில் சினிமா என்ற தலைப்பில் இவர் பேசிய பேச்சு எம் ஜி ஆரைக் கவர்ந்திழுக்க நல்ல பேச்சு நல்ல கருத்து நகைச்சுவையுடன் கூடிய வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம் சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர். வாழ்க என்று எம் ஜி ஆரின் கைப்பட எழுதி பாராட்டைப் பெற்றார்.

பின்னர் சென்னை வந்த இயக்குனர் ஆரம்பத்தில் பத்திரிக்கை ஒன்றில் வேலை பார்தார். எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று அவரது வேண்டுகோளுக்கு இணங்க பொன்னியின் செல்வன் படத்திற்கு மகேந்திரன் திரைக்கதை எழுத தொடங்கினார். மகேந்திரன் திரைக்கதை திருப்தி அளித்ததால் அதை படமாக்க எண்ணினார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அது நிகழாமலே போய்விட்டது. எம்ஜிஆரின் காஞ்சித்தலைவன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார் மகேந்திரன். அவருடன் நான்கு ஆண்டுகள் பயணித்துள்ளார்.


எம்ஜிஆர் உதவியால் இவர் எழுதிய கதையான 'நாம் மூவர்' என்ற படம் ஜம்பு இயக்கத்தில் உருவானது. இப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் இயக்குநர் மகேந்திரனின் சினிமா பயணத்திற்க்கும் வித்திட்டது. தொடர்ந்து ‛‛சபாஷ் தம்பி, பணக்காரப் பிள்ளை, நிறை குடம், திருடி, தங்கப்பதக்கம், ஆடு புலி ஆட்டம், மோகம் முப்பது வருஷம், வாழந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷி மூலம்'' போன்ற படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதி வெற்றி கண்டார்.

சினிமாவில் மெல்ல முன்னேறி வந்த நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து முள்ளும் மலரும் என்ற படத்தை முதன்முதலில் இயக்கி, முதல் படத்தையே மாபெரும் ஹிட் படமாக மாற்றி வெற்றி கண்டார். தொடர்ந்து ‛‛உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, பூட்டாத பூட்டுகள், மெட்டி, கை கொடுக்கும் கை'' என பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இடம் பிடித்தார். ரஜினியின் சினிமா வளர்ச்சியில் இயக்குனர் மகேந்திரனின் பங்கு முக்கியமானது. ரஜினியை வேறு ஒரு கோணத்தில் காட்டியவர் மகேந்திரன்.


கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என்பதை தாண்டி நடிகர் விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடிப்பிலும் முத்திரை பதித்தார். சாருஹாசன், மோகன், சுஹாசினி உள்ளிட்ட பலரை, சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதும் இவர் தான். இவர் இயக்கிய, நெஞ்சத்தை கிள்ளாதே படம், மூன்று தேசிய விருதுகளை பெற்றது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சிறந்த பின்னணி இசை: இளையராஜாவின் ஆங்கில படத்துக்கு விருதுசிறந்த பின்னணி இசை: இளையராஜாவின் ... பாலா படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா? பாலா படத்தில் சூர்யா இரண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Balram - chennai,இந்தியா
04 ஏப், 2022 - 11:06 Report Abuse
Balram மகேந்திரன் சார் ஒரு கலை ப்ரம்மா, தன்னடக்க வாதி, படைப்பாளி. இவருடைய தொழில் பக்தி இவரை இமயம் வரை கொண்டு சென்றது. இவர் படத்தில் ஒரு உயிரோட்டம் கண்டிப்பாக இருக்கும். இவருடைய தொழில் மட்டும் வியாபாரத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப், 2022 - 14:35 Report Abuse
KayD இவர் நண்டு என்ற வெற்றி படமும் டைரக்ட் panni irukaar.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in