டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எனது முழு திறமையையும் காட்டி நடிக்க வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்று நடிகை த்ரிஷா ஏக்கத்துடன் கூறியுள்ளார். விஷால்-த்ரிஷா ஜோடி நடித்த சமர் படம் ரிலீசாகியுள்ளது. இதுதவிர பூலோகம், என்றென்றும் புன்னகை, தெலுங்கில் ரம் படங்களில் நடிக்கிறார். 10 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்கும் த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் பத்து ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து இருக்கிறேன். இது பெரிய விஷயம். இத்தனை காலம் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருப்பது அதிர்ஷ்டம். நான் சினிமா வாய்ப்புகளை தேடிப்போக வில்லை. என்னைத் தேடித்தான் படங்கள் வருகிறது.
இயக்குனர்கள் என்னை மனதில் வைத்து கதை எழுதுகிறார்கள். உங்களை கேரக்டராக நினைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன். எனவே நீங்கள்தான் இதில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா போட்டி நிறைந்தது. ஆனாலும் எனக்குள்ள இடம் அப்படியே இருக்கிறது. நான் நிறைய கேரக்டரில் நடித்துவிட்டேன். அவற்றில் பல கேரக்டர்கள் என் நிஜ வாழ்க்கையை பிரதி பலிப்பதாக இருந்தன. உண்மையில் நான் எப்படி இருக்கிறேனோ அதே மாதிரி பாத்திரங்கள் இருந்தது. அப்படிப்பட்ட படங்களில் நடிக்கவில்லை. நானாக வந்தேன். இதுவரை என் முழு திறமையையும் காட்டுகிற மாதிரி படங்கள் அமையவில்லை. விஷால், ஜெயம் ரவியுடன் நடித்துள்ளேன் இரு படங்களும் தொடர்ந்து வர உள்ளன, என்று கூறியுள்ளார்.