இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பிரபல இந்தி நடிகை பூஜா பட்டுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகை பூஜா பட். இவருக்கு மர்மநபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பூஜாபட் கூறும் போது என் செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாக என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டி தீர்த்த பிறகு போனை துண்டித்து விட்டான். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். மிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி இருந்தது. உடனடியாக இது குறித்து போலீசில் புகார் செய்தேன் என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் மிரட்டல் விடுத்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 25வயதுடைய வாலிபர் என்றும், அவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதனை பூஜா பட்டும் உறுதி செய்துள்ளார்.