ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022' என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் உள்ள தி.நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இயற்கை விவசாயம் நீர்நிலை, பாரம்பரிய விதை மீட்பு, சந்தைப்படுத்துவது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது, உழவன் பவுண்டேஷன் தொடங்கியுள்ள கார்த்தி ஒரு ஏழைப் பெண் விவசாயின் பேரன். இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நான் பிறந்த போது பத்து மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார் என் அம்மா. எனக்கு தலை வாரி விட்டதில்லை. உணவு ஊட்டி விட்டதில்லை. தனியாளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார் என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதார். மேலும், பெண்கள்தான் விவசாயத்தில் அதிகமான வேலைகளை செய்கிறார்கள். சிலையை தான் நாம் கும்பிடுகிறோம். கடவுளை யாரும் பார்த்ததில்லை. பெண்கள்தான் கடவுள் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் சிவகுமார்.