பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அமரர் கல்கி எழுதிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர், கமல் போன்றோர் படமாக்க முயன்றனர். ஆனால் கைகூடவில்லை. இப்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து முடித்துவிட்டார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்குவதோடு, லைகா உடன் இணைந்து தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இரண்டு பாகங்களாக வெளியாகும் இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜனவரி மாதமே முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பட பணிகள் முடியவில்லை. இதனால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற செப்., 30ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதோடு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொருவரின் லுக்கும் அட்டகாசமாக இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.