இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
"என்ட்ராப்மென்ட் என்ற படத்தில் நடித்த கேத்தரீன் ஜீடா ஜோன்சுக்கு, இந்தியா மீதும், இந்திய கலாசாரத்தின் மீதும், மிகுந்த ஆர்வம். ஏற்கனவே ஒருமுறை, ஜெய்ப்பூர், மும்பை போன்ற நகரங்களுக்கு வந்து சென்றுள்ளார். தற்போது, மீண்டும் இந்தியாவுக்கு வரவுள்ளார், அவர். "அலகாபாத்தில் நடக்கும் கும்பமேளா மிகவும் விசேஷமானது என, கேள்விப்பட்டிருக்கிறேன். விரைவில், கும்பமேளா நடக்கவுள்ளது. இதில், என் குடும்பத்தினருடன் பங்கேற்க போகிறேன். நாம் யார் என்பதை, நமக்கு உணர வைக்கும் இடம் தான், அலகாபாத். அங்கு சென்றாலே, நம் மனதுக்குள், ஒருவித அமைதி குடிபுகுமாம். அந்த அனுபவத்தை உணர்வதற்காகவே, கும்பமேளாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன் என்றார்.