'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஸ்வரூபம் படத்தை தடை செய்ய கோரிய சாய்மீரா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட். கமலின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வரூபம். அவரே இயக்கி, நடித்துள்ள இப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு பல்வேறு தடைகள் உருவாகி இருக்கிறது. தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.-ல் இப்படத்தை வெளியிடுவதால் தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ரெஜன்ட் சாய்மீரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் மர்மயோகி படம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்துக்கு ரூ.6.90 கோடி வரை தங்களது நிறுவனம் பணம் கொடுத்திருப்பதாகவும், ஆனால் படத்தை ஆரம்பிக்கவில்லை. இதனால், தங்களது நிறுவனத்துக்கு 10.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தசூழலில் விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதித்தால், எங்களுக்கு வர வேண்டிய பணத்துக்கு உத்தரவாதம் இல்லை. எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். கமல் தரப்பில் இருந்தும் இப்பிரச்னை தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று(8ம் தேதி) நீதிபதி சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விஸ்வரூபம் படத்தை தடை செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது. எனவே அப்படத்தை தடை செய்ய முடியாது என்று கூறி சாய்மீரா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.