ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மத்திய அரசின் சேவை வரியால் கறுப்பு பண புழக்கம் தான் அதிகமாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் பேசினார். மத்திய அரசு திரைப்படக் கலைஞர்களுக்கு 12.36 சதவிகிதம் சேவை வரி விதித்துள்ளது. இதை கடந்த ஆண்டு ஜூலை 1ந் தேதி முதலே அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால் திரையுலகினர் மட்டும் இதனை எதிர்த்து வருகின்றனர். இதைக் கண்டித்து இன்று (7ம் தேதி) திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர். சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட 16 சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
நடிகர்கள் ரஜினி, விஜய், சரத்குமார், சூர்யா, கார்த்தி, ராதாரவி, பிரபு, விக்ரம் பிரபு, விக்ரம், பிரகாஷ்ராஜ், சந்திரசேகர், சாந்தனு, ஜித்தன் ரமேஷ், விஷ்ணு, பாண்டியராஜன், பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் ராதிகா, வடிவுக்கரசி, ரேகா, நளினி, குயிலி, தயாரிப்பாளர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா-சினேகா, விஷால், ஜீவா, ஜெயம் ரவி, பார்த்திபன், விதார்த், விமல், சிங்கம் புலி, டைரக்டர் பாலசந்தர், உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர். காலை 8 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. உண்ணாவிரதத்தை பன்னீர்செல்வம் மற்றும் டைரக்டர் பாலசந்தர் ஆகியோர் பாலச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.
ரஜினி பேசுகையில், கறுப்பு பணத்தை கொண்டு வருவதற்காக வரியை அதிகப்படுத்துவதாக மத்திய அரசு கூறுகிறது. இதுபோன்று வரியை அதிகப்படுத்துவதால் கறுப்பு பண புழக்கம் தான் அதிகமாகும். எனவே இந்த சேவை வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான சட்டம் போட வேண்டும் என்றார்.
போராட்டத்தில் பங்கேற்று நடிகர்கள் கார்த்தி, பார்த்திபன், நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ராதாரவி, நடிகைகள் ஸ்ரீபிரியா, குட்டிபத்மினி, ராதிகா உள்ளிட்ட அனைவரும், மத்திய அரசு சேவை வரியை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
அமைச்சர் சிதம்பரத்தை சந்திக்க முடிவு : போராட்டத்தின் முடிவில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சார்பில் மத்திய அரசு சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வருகிற 10ம் தேதி சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது.
படப்பிடிப்புகள் ரத்து : திரையுலகினரின் போராட்டத்தால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையினரின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
முன்னணி நடிகைகள் பங்கேற்கவில்லை : நடிகைகள் சினேகா, ரம்யாகிருஷ்ணன், நமீதா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் தவிர முன்னணி நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, ஸ்ரேயா உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை. அதேப்போல் நடிகர்கள் கமல், அஜித், சிம்பு போன்றவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.