‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பொதுவாகவே நடிகர்-நடிகைகள் இரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் உடல்ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டு சிலர் வாந்தி எடுப்பதுண்டு. இதனால் அவ்வப்போது அது எந்த மாதிரியான வாந்தியாக இருக்கும் என்ற விவாதங்களும் நடப்பதுண்டு. அப்படி அனுஷ்கா இரண்டாம உலகம் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தபோது இரண்டு தடவை வாந்தி எடுத்திருக்கிறாராம். அது புதிய இடம் புதிய சீதோஷ்ணம் என்பதனால் ஏற்பட்ட வாந்தியாம். அதனால் காட்டுப்பகுதிக்கே மருத்துவர்களை கூட்டிச்சென்று அவருக்கு சிகிச்சை அளித்தார் செல்வராகவன்.
ஆனால் இப்போது அதுவல்ல பிரச்சினை. ராணி ருத்ரம்மா தேவி படத்தில் நடிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கிறார் அனுஷ்கா. தினமும் நன்றாக ஓய்வு எடுத்து விட்டு, மதியத்துக்கு பிறகுதான் வாள் சண்டை, கத்திச்சண்டை பயிற்சிகளில் ஈடுபடுகிறாராம். ஆனால் அப்படி பயிற்சி எடுக்கும்போது, குனிந்து நிமிர்ந்து டைவடித்து வாளை சுழற்றி சுழற்றி சண்டை போவடுவதால், அடிக்கடி குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுக்கும் அனுஷ்கா மயங்கி சாய்ந்து விடுகிறாராம். இந்த செய்தி வெளியே கசிந்ததால் அனுஷ்காவுக்கு வாந்தி மயக்கம் என்றதும் ஆந்திரா படவுலகத்துக்கே தலைசுற்றி போனதாம். ஆனால அதன்பிறகு பயிற்சியினால் ஏற்பட்ட வாந்திதான் என்று செய்தி வெளியிட்டு புகைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்களாம்.
இதனால் பல நாட்களில் பயிற்சி தடைபட்டுள்ளதாம். மேலும், பெரிய அளவில் உடம்பை வருத்தி செயல்படுவதால்தான் இந்த மாதிரியான மயக்கம் வருகிறது என்று மருத்துவர் சொன்ன அட்வைஸ் காரணமாக இப்போது கடினமான பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறாராம் அனுஷ்கா.