'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை: மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை போலீஸ் டி.ஜி.பி.,யை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் விஸ்வரூபம் படம் தொடர்பாக தமக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். இதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சினிமா துறையில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். வரும் 10ம் தேதி விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளேன். 11ம் தேதி தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் வெளியாகும். இந்த படத்தை வெளியிட எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. மிரட்டல் விடுபவர்கள் யார் என புகார் மனுவில் கூறியுள்ளேன். அதனை இங்கு கூற விரும்பவில்லை. எனக்கு பாதுகாப்பு கேட்டும் மனு கொடுத்துள்ளேன். மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் . திட்டமிட்டபடி விஸ்வரூபம் படம் டி.டி.எச்-ல் வெளிவரும். மேலும் இதுதொடர்பாக தலைமைச்செயலாளரை சந்தித்து புகார் மனு கொடுக்க உள்ளேன் என கூறினார்.