தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படைப்பு ‛ஆர்ஆர்ஆர்'. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டவர்களுடன் ஆங்கில நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து, கொமரபீம், அல்லூரி சீதா ராமராஜூ ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனை கதையாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கீராவணி இசையமைத்துள்ளார்.
கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்த இந்த படம் ஜன., 7ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கொரோனா மூன்றாவது அலை காரணமாக பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். சமீபத்தில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டால் மார்ச் 18 அல்லது ஏப்., 28ல் இந்த படத்தை வெளியிட தயார் என படக்குழு அறிவித்தனர்.
இந்தச்சூழலில் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பல மாநிலங்கள் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் தற்போது 50 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அடுத்த மாதத்திற்குள் தியேட்டர்கள் முழுமையாக 100 சதவீதம் அனுமதி கிடைக்கும் என ஆர்ஆர்ஆர் படக்குழு நம்புகின்றனர். இதன்காரணமாக ஆர்ஆர்ஆர் படத்தை மார்ச் 25ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.