டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அரசியலில் ஒரு இரவு முடிவதற்குள் அடுத்த நாள் காலை என்ன மாற்றம் நடக்குமோ என்று சொல்ல முடியாது என்பார்கள். அதேபோல்தான் சினிமாவிலும், ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகளின் சம்பளமும் பன்மடங்காக உயர்ந்து விடும். அந்த வகையில், மைனா படத்துக்குப்பிறகு ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர் தம்பி ராமைய்யா. டைரக்டராக அவரை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் ஒரு நடிகராய் ஏற்றுக்கொண்டனர். அதனால் அதையடுத்து பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் அவருக்கு கிடைத்தன.
மேலும், வெறும் காமெடி நடிகன் என்றால் படம் பார்ப்பவர்களின் மனங்களில் பெரிய அளவில் ஒட்ட முடியாது என்று நினைத்த தம்பி ராமைய்யா, குணசித்ர வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த வகையில் சமீபத்தில் பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்துள்ள கும்கி படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டதால், அடுத்தடுத்து தம்பி ராமைய்யாவை பல படங்களுக்கு புக் பண்ணி பிசியான நடிகராக்கி விட்டனர். அதோடு உ என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அதன்காரணமாக, மைனா தொடங்கி கும்கி வரை ஒருநாளைக்கு 50 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த தம்பி ராமைய்யா, இப்போது கும்கிக்கு பிறகு ஒரு நாளைக்கு 3 லட்சம் சம்பளம் வாங்குகிறார். அந்த வகையில் இன்னொரு ஹிட் படத்தில் நடித்து விட்டால், சந்தானத்தின் சம்பளத்தையும் எட்டி பிடித்துவிடும் நிலையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.