நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
ஐடி துறையில் பணியாற்றி வரும் வெங்கட் ரெட்டி தயாரித்து, நடிக்கும் படம் யாரோ, அவருடன் உபாசனா, சி.எம்.பாலா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சந்தீப் சாய் இயக்குகிறார், கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைக்கிறார். பிப்ரவரி 4ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சந்தீப் சாய் கூறியதாவது: நானும் வெங்கட்டும் அலுவலகத்தில் சக ஊழியர்களாக இருந்தோம், நாங்கள் இருவரும் எப்பொழுதும் சினிமா மீது எங்களுக்குள்ள தீராத ஆர்வத்தை பகிர்ந்துகொண்டோம். வேலையை விட்டுவிட்டு ஒரு குறும்படம் எடுத்தேன். அதைப் பார்த்த வெங்கட், நாங்கள் இணைந்து ஒரு முழு நீள திரைப்படத்தில் பணியாற்றுவோம் என்று ஒப்புக்கொண்டார்.
இது மர்டர் மிஸ்ட்ரி, சைக்கோ த்ரில்லர், ஹாரர் இந்த மூன்றின் கலவையாக உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனித்த பங்களாவில் பெரும்பகுதி கதை நடக்கும். படத்தின் ஹீரோ ஒரு ஆர்கிடெக்ட் தன் பணி நிமித்தமாக அந்த பங்களாவுக்கு செல்கிறார். அந்த பங்களாவிலும் அதை சுற்றிலும் தொடர்ச்சியாக கொலை நடக்கிறது. அதன் பின்னணி என்ன என்பதை வித்தியாசமான பார்வையில் சொல்கிறோம். என்றார்.