‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மும்பை : கடந்த 2007ல் ராஜஸ்தான் மாநிலத்தில் 2007ல் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலிவுட் நடிகையும், குஷி என்ற தமிழ் படத்தில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டி(46), பங்கேற்றார். ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேயும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது. மேடையில் இருந்தபோது, திடீரென ஷில்பாவை கட்டியணைத்து ரிச்சர்ட் கெரே முத்தமிட்டார்.
இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் ரிச்சர்ட் கெரே மன்னிப்பு கேட்டார். இந நிலையில் 'மேடையில் முத்தமிட்டதற்கு ஷில்பா ஷெட்டி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது திட்டமிட்டு நடந்த நாடகம்' என, ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 'ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டவர். திட்டமிட்டு அந்த சம்பவம் நடக்கவில்லை. அதனால், அவர் குற்றமற்றவர்' என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.