பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
என்.டி.பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் அவரது முந்தைய சாதனைகளை முறியடித்து தற்போதும் ஓடிடி தளத்திலும், தியேட்டரிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஐதராபாத் போக்குவரத்து போலீஸ்.
என்.டி.பாலகிருஷ்ணாவும், படத்தின் நாயகி ஜெய்ஸ் வாலும் ஜீப்பில் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு லாரி குறுக்கே வந்துவிட திடீர் என்று பிரேக் போடுவார் பாலய்யா. இதனால் பக்கத்து சீட்டில் இருக்கும் ஜெய்ஸ்வால் தலை காரின் முன்பகுதியில் போதும். அதனை தன் கை வைத்து தடுக்கும் பாலையா. முதலில் சீட் பெல்ட போட வேண்டும் என்பார்.
இந்த காட்சியை காரில் செல்வபர்கள் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும் என்கிற விழிப்புணர்வுக்காக ஐதராபாத் போலீசார் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திய நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குனர் போயபதி ஸ்ரீனு ஆகியோருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் விழிப்புணர்வுக்கு புஷ்பா படத்தில் இடம்பெற்ற அல்லு அர்ஜுன் படத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.