Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாலத்தீவில் ஷூப்ரா அய்யப்பாவிடம் காதலை சொன்ன தொழிலதிபர்

25 ஜன, 2022 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Shubra-aiyappa-got-engaged

பிரபல கன்னட நடிகை ஷூப்ரா அய்யப்பா. பரத்தினிதி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானர் அதன்பிறகு தமிழில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு சொந்த மொழியான கன்னடத்தில் வஜ்ரகயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்பேது திம்மையா அண்ட் திம்மையா, ரமண அவதாரா படங்களில் நடித்து வருகிறார்.

ஷூப்ரா அய்யப்பா பெங்களூருவைச் சேர்ந்த இளம் தொழில் அதிபர் விஷால் சிவப்பாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. அவருடன்தான் வாழ்ந்து வருகிறார் என்றும் சொன்னார்கள். இந்த நிலையில் எங்களுக்கு நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார் ஷூப்ரா அய்யப்பா. இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லலாம் என்றுதான் விஷால் என்னை அழைத்துச் சென்றார். அங்கு அவர் பல சிறப்பான ஏற்பாடுகளை செய்து வைத்து இரவு விருந்தின்போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் பின்னணியில் என் முன் மண்டியிட்டு எனக்கு மோதிரம் அணிவித்து தன் காதலை புரபோஸ் செய்து என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டார். அந்த தருணத்தை நான் எதிர்பார்க்கவில்லை. வானத்தில் பறப்பது மாதிரி இருந்தது. இப்போது எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது.

விஷாலும் நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பரின் நிகழ்ச்சியில் சந்தித்தோம். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்தோம், மற்றவர் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தினோம். இறுதியில், ஒரு உறவினர் எங்களை சரியாக அறிமுகப்படுத்தினார். நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம், இதோ, எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம்.

கொரோனா நிலைமை சரியாகும் வரை காத்திருக்க முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு வெளிநாட்டில் நிறைய நண்பர்கள் உள்ளனர், எல்லோரும் எங்களுடன் அந்த மங்கல நாளில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா ஹீரோயின் ஆனார் காவ்யாசினிமா ஹீரோயின் ஆனார் காவ்யா காதல் ஆல்பம் உருவாக்குவதில் ஐஸ்வர்யா தீவிரம் காதல் ஆல்பம் உருவாக்குவதில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26 ஜன, 2022 - 04:36 Report Abuse
J.V. Iyer முதல் பக்க செய்தியை இப்படிப்போட்டுவிட்டீர்களே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in