நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் ரக்ஷா ஹோலா. பெங்களூரை சேர்ந்த ரக்ஷா, நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கதாநாயகியாக தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அந்த தொடர் புதிய மாற்றங்களுடன் ஒளிபரப்ப தொடங்கிய போது, ரக்ஷா ஹோலா தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து அவர் ஜீ தமிழின் 'அன்பே சிவம்' தொடரில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே சிவம் தொடரும் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது ரக்ஷா ஹோலா அதிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விலகியதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அவர் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற தகவலை தொலைக்காட்சி நிறுவனம் மிக விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.