டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் தற்போதும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை, ராங்கி' ஆகிய படங்களும் வெளிவர வேண்டும்.
இந்நிலையில் இந்த மாதத் துவக்கத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த போது த்ரிஷா கொரானோவால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அங்கேயே சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து கடந்த வாரம் தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் முதல் வெப் தொடரான 'பிருந்தா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நாய்களுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தான் மீண்டும் நடிக்க வந்துவிட்டது பற்றி பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா, ஆகியோர் வரிசையில் த்ரிஷாவும் வெப் தொடரில் நடிக்க வந்துவிட்டார். இதில் அவர் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறியவுடனே பலரும் நடிக்க வந்துவிடுகிறார்கள்.