ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியானது. தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, இந்த புஷ்பா படம் மூலம் ஹிந்தி மார்க்கெட்டில் அங்கீகாரம் பெற்றுள்ளார். அதோடு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ராஷ்மிக்காவுக்கு ஊக்கத்தொகை வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
அந்தவகையில் புஷ்பா முதல் பாகத்தில் நடிக்க அவருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அடுத்து இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு 3 கோடி சம்பளம் கொடுக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார் ராஷ்மிகா. மேலும், ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இரண்டு படங்களும் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகின்றன.