ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா தயாரித்து, இயக்கும் படம் இசை. இந்தப் படத்துக்கு அவரே இசை அமைக்கிறார். இந்தப் படம் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானுக்கு இடையேயான ஈகோ மோதலை அடிப்படையாக கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா கூறியிருப்பதாவது, இரண்டு இசை அமைப்பாளர்களின் கதைதான் இது. சாதித்து முடித்துவிட்டட ஒரு இசை அமைப்பாளருக்கும், சாதிக்கத் துடிக்கும் ஒரு இசை அமைப்பாளருக்கும் இடையேயான பிரச்னைதான் படம். அதை நீங்கள் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் என்ற கற்பனை செய்து கொண்டால் நான் என்ன செய்ய முடியும். தலைமுறைகள் மோதல் என்பது அரசியலில் தொடங்கி, அன்றாடம் காய்ச்சிகள் வரைக்கும் இருக்கிறது. அதில் நான் இசைத் துறையை தேர்ந்தெடுத்திருக்கிறேன். படத்தின் கதையைச் சொல்லி ஏ.ஆர்.ரகுமானிடம் இசை அமைக்க கேட்டேன். கதையை கேட்ட அவர் நீங்களே இசை அமைத்துவிடுங்கள். உங்களாலும் இசை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னார். அதனால் நானே இசை அமைக்கிறேன். எனது முந்தைய படங்களைப்போல நெருக்கமான ரொமான்ஸ் இருக்காது என்றார்.