டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கண்மணி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் சாம்பவி. தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள சாம்பவி, ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அந்த சாப்பாட்டை அவர் சாப்பிடும் போது ப்ளாஸ்டிக் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்ட அவர், ஒரு வழியாக பெரிய ஆபத்தில்லாமல் ப்ளாஸ்டிக் துண்டை வெளி எடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த குறிப்பிட்ட ஹோட்டலிலோ அல்லது மற்ற ஹோட்டலிலோ சாப்பாடு ஆர்டர் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கும் படி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார்.