'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் துளசி. இவர் மாஜி நடிகை ராதாவின் மகள் என்பதால், அவரது தலையீடு நிறைய இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் வெளியான செய்திகளை அடுத்து, துளசியை புக் பண்ண இயக்குனர்கள் தயங்கி வருகின்றனர். ஆனால் இந்த தகவல் ராதாவின் காதுக்கு சென்றபோது, நான் எனது மகள்கள் கார்த்திகா, துளசி இருவர் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்குகூட சென்றதில்லை. அந்த அளவுக்கு அவர்களை இயக்குனர்களின் முழுபொறுப்பில் விட்டு வருகிறேன் என்று கற்பூரம் அடித்து சத்யம் செய்து வருகிறார்.
இதை உறுதிப்படுத்த இப்போது கடல் படத்தில் நடித்துள்ள துளசியும் தன்னை சந்திக்கும் சினிமா நபர்களிடம் இதை தெளிவுபடுத்தி வருகிறார். முக்கியமாக, எனக்கான கதை கேட்கும்போது மட்டும் அம்மா உடனிருப்பார். ஆனால் கதை எல்லோருக்கும் பிடித்து விட்டது என்கிறபட்சத்தில் கதையில் அப்படி மாற்றம் செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்ற எந்தவித கமெண்டும் அவர் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்துக்கே வருவதில்லை. அதனால் என் விசயத்தில் அம்மா தலையிடுகிறார் என்று வெளியான தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு வருகிறார் துளசி.