பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த படமான ஸ்ரீராமராஜ்ஜியம் அவரை விருது நடிகையாக்கியதோடு, ரீ-என்ட்ரிக்கும் வழிவகுத்த படம். அதனால்தான் அவர் திரும்பவும் நடிக்க வந்துவிட்டார் என்றதும், உடனடியாக கிருஷ்ணம் வந்தே ஜெகத்குருவும் படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். அதைப்பார்த்து அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நயன்தாராவை வாரிக்கொண்டனர். ஆனால் இப்போது கிருஷ்ணம் வந்தே ஜெகத்குருவும் தோல்வியடைந்து விட்டது. இதனால் ஆந்திர படாதிபதிகள் மத்தியில் நயன்தாரா மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. இதனால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு அவரை புக் பண்ண தயங்கி வருகிறார்கள்.
ஆனால் சில ஆந்திர ஹீரோக்கள் இன்னும் நயன்தாரா மீது ஈர்ப்புடன்தான் இருக்கிறார்களாம். அவர் ஒரு டூஇன்ஒன் நடிகை. அவரை கிளாமர், ஹோம்லி என இரண்டு விதமாகவும் யூஸ் பண்ணலாம் என்று நேரடி சிபாரிசு செய்கிறார்களாம். இதனால் நடிகர்களுக்காக படாதிபதிகளும் நயனை விட முடியாத நிலையில் இருக்கிறார்கள். இப்படி செகண்ட் இன்னிங்சிலும் ஹீரோக்கள் நயன்தாரா பக்கம் இருப்பதற்கு முக்கிய காரணம், அவரது அணுகுமுறைதானாம். தன்னுடன் நடிக்காத நடிகர்களாக இருந்தாலும் நட்பு வைத்திருப்பாராம். அவ்வப்போது ஹோட்டல்களில், பார்ட்டிகளில் சந்தித்து பரஸ்பரம் பரிமாறிக்கொள்வாராம். அந்த பந்தம்தான் நயனுக்கு பக்கபலமாக இருந்து வருகிறதாம்.