ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டுக்கு துபாய்க்கு சென்றார்கள். அங்கு உள்ள மிக உயரமான கட்டிடத்தின் முன்பாக அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். மேலும் துபாய் சென்ற இடத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை நடிகை மெஹ்ரின் சந்தித்துள்ளார். இவர் தமிழில், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். விக்னேஷ் சிவன், நயன்தாராவை தான் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.