ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில், கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை காதலித்த பிறகு, இந்து மதத்துக்கு மாறியதாக கூறப்பட்டது. ஆனால், பின் அவருடனான காதல் முறிந்து போன பிறகு, இப்போது மீண்டும் கிறிஸ்துவ மதத்துக்கே நயன்தாரா மாறி விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி நயன்தாரா தரப்பில் விசாரித்த போது, அவர் பிறப்பால் கிறிஸ்துவ பெண்தான் என்ற போதும், இந்து கோவில்களுக்கும் அவ்வப் போது செல்வார். குறிப்பாக, படப்பிடிப்புக்காக திருநெல்வேலிக்கு செல்லும்போதெல்லாம், அங்குள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்வதை தொடர்ந்து வருகிறார். அதேபோல், திருப்பதி கோவிலுக்கும் செல்வார். அதனால், நயன்தாராவைப் பொறுத்த வரை, எல்லா மதமும் அவருக்கு சம்மதம் தான் என்கின்றனர்.